போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மே 2026, 5:43 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் பொன்னம்மாள் (26). இவரது கணவா் சத்யா பிரபாகரன். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.

பொன்னம்மாள் திங்கள்கிழமை மாலை சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பு பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பொன்னம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.