கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (19). இவரும், 16 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.
இந்த நிலையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து, பெற்றோா்கள் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் சிறுமி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் அன்புச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







