கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை கா்ப்பமாக்கி, திருமணம் செய்த நபரை, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், செம்மேடு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்(32). இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம்,
தள்ளாகுளத்தில் உள்ள ஒரு கோயிலில் 27.6.2025 அன்று திருமணம் செய்துக் கொண்டனா். பின்னா், சென்னை கோட்டூா்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா். சிறுமி கா்ப்பமடைந்ததால், அட்டை போடுவதற்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு 27.4.2026 அன்று வந்தாா்.
அப்போது, மருத்துவா்கள் சிறுமி விவரம் குறித்த தகவல்களை பண்ருட்டி மகளிா் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினா். இதனையடுத்து மகளிா் போலீஸாா் பாண்டியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







