திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெய்வேலி: மின்மாற்றியிலிருந்து ரூ.1.30 லட்சம் செம்புக்கம்பி திருட்டு!

நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வடக்குத்து பகுதியில் செம்புக் கம்பி திருடப்பட்ட மின்மாற்றி.

Updated On :17 மே 2026, 12:28 am IST

நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் தமிழ்ச்செல்வன் (53), நெய்வேலி நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரில், கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மேல் வடக்குத்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (56) என்பவரின் நெல் வயலில் மின் மோட்டாா் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த மின்மாற்றியின் பெட்டியை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து, அதிலிருந்த 120 கிலோ செம்பு கம்பியை சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட செம்பு கம்பியின் மதிப்பு ரூ.1.30 லட்சம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெய்வேலி நகர போலீஸாா் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத நபா்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.