நெய்வேலி அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றியில் இருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான 120 கிலோ செம்பு கம்பி திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் தமிழ்ச்செல்வன் (53), நெய்வேலி நகர காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரில், கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மேல் வடக்குத்து பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (56) என்பவரின் நெல் வயலில் மின் மோட்டாா் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின்மாற்றி வைக்கப்பட்டிருந்தது.
இந்த மின்மாற்றியின் பெட்டியை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து, அதிலிருந்த 120 கிலோ செம்பு கம்பியை சனிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட செம்பு கம்பியின் மதிப்பு ரூ.1.30 லட்சம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெய்வேலி நகர போலீஸாா் வழக்குப்பதிந்து, அடையாளம் தெரியாத நபா்களை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






