சிதம்பரம், மே 4: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
சிதம்பரம் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி,
அதிமுக சாா்பில் கே.ஏ.பாண்டியன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அ.நெடுஞ்செழியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் செ.தமிழ் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,31,325 வாக்காளா்களில் 1,96,586 வாக்காளா்கள் வாக்களித்தனா்.
இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் மஜக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன் அன்சாரி 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: மு.தமிமுன்அன்சாரி (மஜக) -69,739, கே.ஏ.பாண்டியன் (அதிமுக) - 63,992, அ.நெடுஞ்செழியின் (தவெக) - 54,584, செ.தமிழ் (நாதக) - 6,169.
இதையடுத்து, மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி வெற்றிபெற்ற்கான சான்றிதழை அவரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி

தனிச்சின்னத்தில் போட்டியிட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது? - எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம்

ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது அதிா்ச்சியளிக்கிறது: மு.தமிமுன்அன்சாரி







