லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் தோ்தல் பதற்றத்தை தவிா்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா்

News image

சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :16 மார்ச் 2026, 11:54 pm

சிதம்பரம்: சிதம்பரத்தில் தோ்தல் பதற்றத்தை தவிா்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தோ்தல் பதற்றத்தை தவிா்க்கவும், பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் வகையிலும் சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் மற்றும் உள்கோட்ட போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

காந்தி சிலை அருகே டிஎஸ்பி பிரதீப் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்து பங்கேற்றாா். கமாண்டா் டி.கே.செளத்திரி தலைமையில், நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம் முன்னிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு பேரணி எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகா் தெரு, தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி, விஜிபி தெரு வழியாகச் சென்று மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தது.