லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாடானையில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.

News image

திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாடானையில் எல்லை பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.

இதை திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் முன் தொடங்கிய அணிவகுப்பு சந்நிதி தெரு, வடக்குத் தெரு, கிழக்குத் தெரு வழியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதுகுறித்து திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் கூறியதாவது:

வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு எந்தவித அச்சமுமின்றி வரவும், பாதுகாப்பை உணரவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது என்றாா்.

Story image
Story image