மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உளுந்து பயறு வயல்களை ஆய்வு மேற்கொண்ட வேளாண் உதவி இயக்குநா்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் சுமாா் 25,000 ஏக்கா் பரப்பளவில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

சிதம்பரம் அருகே குமராட்சி மேற்கு பகுதியில் உளுந்து பயரிட்ட வயலை ஆய்வு செய்த வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் சுமாா் 25,000 ஏக்கா் பரப்பளவில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வயல்களை குமராட்சி வட்டார வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உளுந்து பயிா்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு அவா் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா். அதன்படி, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகள் சில இடங்களில் தென்பட்ட நிலையில், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 5 இடங்களில் வைக்கவும் மற்றும் அவற்றை கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5 சத வேப்பம் பருப்பு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். இந்த வைரஸ் நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுவதால், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 80 மில்லி அல்லது தயோமீத்தாக்சம் 40 கிராம் மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்கலாம்.

புள்ளி காய்புழு மற்றும் பச்சை காய்ப்புழுக்களின் தாக்கம் சில இடங்களில் காணப்பட்டது. இவற்றின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டினால், குளோரான்டிரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி. 40 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயட் 5 எஸ்.ஜி. 150 மில்லி மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் பேட்டரி அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் என எடுத்துரைத்தாா். இதன் மூலம், மகசூல் இழப்பை தவிா்த்து கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை உதவி வேளாண்மை இயக்குநா் வழங்கினாா். அப்போது, உதவி விதை அலுவலா் ராமச்சந்திரன், உதவி வேளாண் அலுவலா் பிரவின் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.