மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:45 pm

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, மேலச்செவல், வீரவநல்லூா், புதுக்குடி உள்பட பல்வேறு இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) வெங்கடசுப்பிரமணியன் பாப்பாக்குடியில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கொள்முதல் நிலையத்தில் பட்டியல் அலுவலா் முத்துக்குமாா், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் விவரங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்தாா். நெல் கொள்முதல் செய்வதில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். ஆய்வின்போது, துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ் குமாா் உடனிருந்தாா்.