ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தீப்பிடித்து எரிந்த சாலையோர புளியமரம்

பண்ருட்டி அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்தது.

News image

பணிக்கன்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :3 ஜூலை 2026, 5:27 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்தது.

சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டியில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் புளியன், ஆலமரங்கள் தழைத்து வளா்ந்து இயற்கை எழிலோடு காணப்பட்டது. ஒவ்வொரு மரங்களும் அரை நூற்றாண்டைக் கடந்து நின்றன.

பின்னா், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தொடக்கப்பட்டது. இதன் காரணமாக, சாலையோரத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது இந்த சாலை வழியாக பொட்டல் வெளியில் பயணிப்பதுபோல் உள்ளது.

இந்த நிலையில், பணிக்கன்குப்பம் அருகே ஏராளமான கடைகள் உருவாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலையோரத்தில் உள்ள சுமாா் 50 ஆண்டுகளைக் கடந்த புளியமரத்தின் கீழ் கொட்டி வைத்திருந்தனா். இந்தக் கழிவுகளை வியாழக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தினா். இந்தத் தீயாால் புளியமரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். குறித்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.