டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடலூா் மாவட்டத்தில் 36 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 36 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 36 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மாவட்ட பணியிட மாற்றக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 தொடா்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலூா் புதுநகரில் பணியாற்றிய ஜி.எழிலரசி கடலூா் துறைமுகத்துக்கும், கடலூா் முதுநகரில் பணியாற்றிய வி.முகிலரசு வடலூருக்கும், ரெட்டிச்சாவடியில் பணியாற்றிய எஸ்.சுகன்யா பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றிய டி.தங்கவேல் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்துக்கும், தேவனாம்பட்டினத்தில் பணியாற்றிய அண்ணாமலை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்கள் உள்பட மொத்தம் 36 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவரையும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்து, அவா்களின் புதிய பணியிடங்களில் சேரும் அறிக்கையை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.