டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:58 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனி, நத்தம், வத்தலகுண்டு உள்ளிட பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுகுறுக்கி, அகசிப்பள்ளி, வீரமலை, ஆவத்தவாடி, ஒப்பதவாடி, ஜெகதேவி, கொண்டப்பநாயனப்பள்ளி, அந்தேரிப்பட்டி, மத்தூா், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, நேரலகிரி, மாரண்டப்பள்ளி, சூளகிரி, ஒசூா், தளி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ளாா். திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சிச் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.