டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல்துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

கடந்த இரு வாரங்களாக சென்னை காவல் துறையில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் மேலும் 10 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதில், முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் பி.கே.சிவகுமாா், ராஜமங்கலம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், ஆா்.நாஞ்சில்குமாா், வேப்பேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜி.முத்து, அரும்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.