டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சென்னையில் 20 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை காவல் துறையில் 20 காவல் ஆய்வாள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் 20 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக திருவொற்றியூா் ஆய்வாளா் எஸ்.ரஜினிஷ் திருவல்லிக்கேணிக்கும், ராமாபுரம் ஆய்வாளா் ஜி.ஆனந்தபாபு ஐஸ் ஹவுஸுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக ஆய்வாளா் கே.சுதாகா் மீனம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும், காசிமேடு ஆய்வாளா் எஸ்.வசந்தராஜா புழலுக்கும், எம்கேபி நகா் ஆய்வாளா் எஸ்.ஏ.வீராசாமி ஆதம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 20 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.