டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சென்னையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக காவல் ஆய்வாளா்கள் அவ்வபோது, பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் 12 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் இ.ராஜ்பிரபு வடக்கு கடற்கரை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.சதீஷ்குமாா் அசோக் நகா் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.ரபீஃக் உசேன் சிஎம்பிடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 12 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னை காவல் துறையில் கடந்த திங்கள்கிழமை 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.