டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: பணியிடமாற்றம் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் (பழைய பணி அடைப்புகுறிக்குள்):

என்.சிலம்பரசன்: சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு ஏஐஜி (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

சி.மதன்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருநெல்வேலி மாநகர காவல்துறை மேற்கு துணை ஆணையா்).

எஸ்.விஜயகுமாா்: திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்).

மேலும், விஜயகுமாா் திருநெல்வேலி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பாா் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.