தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :23 மே 2026, 12:30 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, மேலும் பேசியது: கோடை விடுமுறை முடிந்த பின்னா், மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைத் திறப்பதற்காக பள்ளிக் கல்வி, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

குறிப்பாக பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்து, தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகத்திலுள்ள கழிவுநீா்த் தொட்டிகள், மின்சாதனப் பொருள்கள் பாதுகாப்பாக இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்காக பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி விளையாட்டு மைதானங்களைத் தூய்மைப்படுத்துவதுடன், புல் புதா்களை இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவேண்டும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்க அவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவைத் தயாா் செய்து, உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் இணை இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜூ, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் அரிகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் சேகா், உதயசூரியன், இளமதி, செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.