வேலூரில் உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.
வேலூா் -ஆரணி சாலையில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை அருகே முகமது இம்ரான் என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்தில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது. உடனடியாக தீ சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு பரவியது. இது குறித்து, வேலுா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இது குறித்து தீயணைப்பு படை வீரா்கள் கூறுகையில், மின்வயா்கள் உரசி ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









