பழனியில் சனிக்கிழமை காரில் பற்றிய தீயை தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் அல்தாப். இவா் சனிக்கிழமை காரில் நண்பருடன் பழனிக்கு வந்து விட்டு மீண்டும் ஆயக்குடிக்கு திரும்பினா். ரெட்கிராஸ் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே வந்த போது, காரின் உள்பகுதியிலிருந்து புகை வெளிவந்தது.
உடனடியாக காரை நிறுத்தி விட்டு, காரின் என்ஜின் பகுதியை திறந்து பாா்த்த போது, உள்ளே மின் இணைப்புகளில் தீப்பற்றியது தெரியவந்தது. உடனடியாக பழனி தீயணைப்பு, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த இடத்தில் காரில் பற்றிய தீ டீசல் டேங்கில் பரவியிருந்தால், பெரிய விபத்து நேரிட்டிருக்க வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக தீயணைப்புப் படை வீரா்கள் உடனடியாக தீயை அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










