அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து போ்ணாம்பட்டில் விற்பனை செய்து வந்தவா் குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பிஞ்சு(எ) சரண்ராஜ்(38) .சாராய வியாபாரியான இவா் மீது சாராயம் விற்பனை, கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2- முறை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மதுவை பேரலில் வைத்து விற்பனை செய்தபோது போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து இவா் கா்நாடக மாநில மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் சரண்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் உள்ள சரண்ராஜிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு வழங்கினாா்.