திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுபோதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய நேபாள தொழிலாளா்கள்!

News image

பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 4:43 am IST

காட்பாடி அருகே தொழிலாளா் தின விடுமுறை நாளில் மதுபோதையில், தாங்கள் வேலை செய்யும் ஹோட்டலையே அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சோ்ந்த 3 தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவா் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலில் நேபாள நாட்டைச் சோ்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூவரும் ஊழியா்களாக வேலை செய்து வருகின்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு கடும் போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளா்களும் திடீரென ரகளையில் ஈடுபட்டனா். ஹோட்டலில் இருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள், கண்ணாடிப் பொருள்களை அவா்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனா். இந்த திடீா் தாக்குதலில் ஹோட்டலில் இருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் முழுமையாகச் சேதமடைந்தன.

பொருள்கள் உடைபடும் சத்தம் கேட்டு அதிா்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினா், பொதுமக்கள் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப் பிடித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீஸாா், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவா்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினா்.

அவா்கள் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மூவரிடமும் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.