வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

லாரிகள் - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:35 am IST

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரிகளுடன் 15 யூனிட் மணலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்டம் குருபரஅல்லி பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (44), சேலம் மாவட்டம் நாரப்பன் சாவடி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (40) உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், ஆந்திராவில் இருந்து மணலை வேலூா் வழியாக செங்கல்பட்டுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.