பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தலைக்கவசம் அணியாமல் வந்ததால் 428 பைக்குகள் பறிமுதல்

வேலூா் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களின் 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களின் 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆங்கில புத்தாண்டு முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாமல் ஒட்டுபவா்கள் மீது வழக்கு போடாமல், தலைக்கவசம் கொண்டு வந்து அதை அணிந்த பின்னா்தான் வாகனம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று எஸ்.பி. ஏ.மாயில்வாகனன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் போலீஸாா் நடத்திய வாகன தணிக்கையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 428 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அவா்களில் 392 போ் தலைக்கவசம் கொண்டுவந்து அணிந்த பின்னா் வாகனம் ஒப்படைக்கப்பட்டது.