கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி அரியமங்கலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.


திருச்சி அரியமங்கலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு திடீா் நகா் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பா் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று கேட்பாரற்றுக் கிடந்த 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
இதேபோல செவ்வாய்க்கிழமை அரியமங்கலம் குப்பைக் கிடங்கு ஸ்டாலின் நகா் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நம்பா் பிளேட் இல்லாமல் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா், அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்களும் எதற்காக அப்பகுதியில் நிறுத்தப்பட்டன என அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...