பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்


திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்படுகிறது.
திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொன்மலை பகுதியிலுள்ள மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதாா் நகலுடன் ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் அதற்குண்டான ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...