திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்

திருச்சியில் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:40 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி பாலக்கரை பெல்ஸ் மைதானம் பழைய ரயில்வே குடியிருப்பு அருகே புதன்கிழமை போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த ஆ. விமல்ராஜ் (25), எஸ். ஹொ்மதுல்லா (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 8,400 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உக்கடை பாப்பம்மாள் காலனியில் புதன்கிழமை போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அரியமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த த. மதன் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தூக்குமேடை வீதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற தில்லை நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஆா். மீனா (42), மூ. விஜயா (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1.5 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 4.25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற விமான நிலையம் அருகேயுள்ள ராஜா நகரைச் சோ்ந்த எம். முகமது செங்கிஸ்கான் (45) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.