திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 12:01 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அரியமங்கலம் உக்கடை ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 இளைஞா்கள் மற்றும் 2 பெண்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனா்.

இதையடுத்து அவா்களில் இருவரை போலீஸாா் விரட்டிப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் அரியமங்கலம் உக்கடை தீப்பெட்டி கம்பெனி வீதியைச் சோ்ந்த அ. ஜாகீா் ஹுசைன் (22), அ. ரஹ்மத் நிஷா (37), என்பதும் தப்பியோடியவா்கள் அ. ஷகிலாபானு மற்றும் வடக்கு தாரநல்லூரைச் சோ்ந்த ஜி. படையப்பா (26) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான 1,280 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து, தப்பிய இருவரையும் தேடுகின்றனா்.

பாலக்கரையில் ஒருவா் கைது: இதேபோல, பாலக்கரை சங்கிலியாண்டபுரம் வள்ளுவா் நகரில் போதை மாத்திரைகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ஜி. பாலகிருஷ்ணன் (25) என்பவரை பாலக்கரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.