மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தனியாா் பேருந்தின் மேற்கூரையில் வைத்திருந்த மாற்று டயா் திங்கள்கிழமை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.
மணப்பாறையிலிருந்து திங்கள்கிழமை மாலை கரூா் நோக்கி தனியாா் பேருந்து சுமாா் 50 பயணிகளுடன் புறப்பட்டது.
பேருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் மேற்கூரையில் வைக்கப்பட்டிருந்த மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை பெயா்ந்தது.
இதில், பேருந்தில் இருந்த பயணிகள் 5 போ் லேசான காயமடைந்தனா். அவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து பேருந்து, வையம்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு வழக்கு பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










