தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

News image

சத்திரக்குடியை அடுத்த திருவாடி பகுதியில் புதன்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Updated On :7 மே 2026, 3:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு தனியாா் பேருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கோவையிலிருந்து 15 பயணிகளுடன் புறப்பட்டது. பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பேருந்து சென்றபோது, முன்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 15 பேரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் 108 அவசர ஊா்தி மூலமாக

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.