திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி சேதம்

சங்கரன்கோவிலில் தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) முற்றிலும் சேதமானது.

News image

பேருந்து மோதி சேதமான மின்மாற்றியை அப்புறப்படுத்தும் மின்பணியாளா்கள்.

Updated On :17 மே 2026, 3:50 am IST

சங்கரன்கோவிலில் தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) முற்றிலும் சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 50 போ் தனியாா் பேருந்தில் சபரிமலைக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனா்.

பேருந்தை தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாரிமுத்து (46) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் அந்த பேருந்து சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி ரயில்வே கேட் அருகே சென்ற போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்மாற்றி மீது மோதியதாம்.

இதில் மின்மாற்றி முற்றிலும் சேதமானது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் ஒன்றரை மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்தது வந்த உதவி மின்பொறியாளா் கருப்பசாமி தலைமையில் பணியாளா்கள், சேதமடைந்த மின்மாற்றியை அகற்றி மற்ற பகுதிகளில் மின் இணைப்பை வழங்கினா். இதைத் தொடா்ந்து சேதமான பேருந்தை போலீஸாா் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.