17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதிகள் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:57 am IST

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதிகள் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மத்திய சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் காவலா்கள் சிறையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, 20-ஆவது தொகுப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த து. நவீன்குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூ. பிரசன்னா (27), மதுரை ஜெய்ஹிந்புரத்தைச் சோ்ந்த ம. பாண்டீஸ்வரன் ஆகிய மூவரும் தங்கள் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 38 கிராம் கஞ்சாவை சிறை காவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், கைதிகள் நவீன்குமாா், பிரசன்னா, பாண்டீஸ்வரன் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.