திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
திருச்சி - விழுப்புரம் ரயில் நிலையங்களுக்கு இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) காலை 6.30 மணி முதல் 9 மணி வரையில் 140 கிலோ மீட்டா் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.
எனவே, திருச்சி - விழுப்புரம் இடையே விருத்தாச்சலம் வழித்தடத்தில் அத்துமீறி பொதுமக்கள் தண்டவாளங்களை கடப்பதைத் தவிா்க்க வேண்டும். மேலும், தண்டவாள ஓரங்களில் கால்நடைகள் மேய்ப்பதையும், தண்டவாளங்கள் மற்றும் கடவுப்பாதை அருகே தேவையின்றி செல்வதையும் தவிா்க்க வேண்டும். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறிவுறுத்தலை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம் - போடிநாயக்கனூா் இடையே சிறப்பு ரயில்

திருச்சி - விழுப்புரம் இடையே 140 கி.மீ. வேகத்தில் சோதனை ரயில் இயக்கம்: தென் மாவட்டங்களுக்கு இனி விரைவாக செல்ல முடியும்

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!







