திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாம்பரம் - போடிநாயக்கனூா் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போடிநாயக்கனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 5:12 am IST

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போடிநாயக்கனூா் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயிலானது (06059) வரும் 23, 30, ஜூன் 6, 13 ஆம் தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படும். மறுமாா்க்கமாக, போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06060) வரும் 24, 31, ஜூன் 7, 14 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும்.

4 குளிா்ச்சாதனப் பெட்டிகள், 12 படுக்கைப் பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூருக்கு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, போடிநாயக்கனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை காலை 6.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.