பெங்களூா், திருநெல்வேலி, தூத்துக்குடி சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி - பெங்களூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06007) வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைதோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக, பெங்களூா் - திருச்சி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06008) வரும் 9 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06166) வரும் 14 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலானது (06165) வரும் 15 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06017) வரும் 15 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06017) வரும் 16 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06045) வரும் 12 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயிலானது (06046) வரும் 14 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










