திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

கோடைகால கூட்ட நெரிசலைத் குறைக்க தூத்துக்குடி - தாம்பரம் - தூத்துக்குடி, சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா், தாம்பரம் - செங்கோட்டை, செங்கோட்டை - சென்னை கடற்கரை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News image

ரயில்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:49 pm IST

கோடைகால கூட்ட நெரிசலைத் குறைக்க தூத்துக்குடி - தாம்பரம் - தூத்துக்குடி, சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா், தாம்பரம் - செங்கோட்டை, செங்கோட்டை - சென்னை கடற்கரை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06018) வரும் 20, 27 ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06017) வரும் 21, 28 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலானது தூத்துக்குடியிலிருந்து திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு துத்திமேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தூத்துக்குடிக்கு அடுத்த நாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும்.

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06045) வரும் 22 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06046) வரும் 26 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை ஒரு வழிப்பாதை சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 22 ஆம் தேதியும், செங்கோட்டை - சென்னை கடற்கரை ஒரு வழிப்பாதை சிறப்பு ரயிலானது (06090) வரும் 23 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.