திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து

News image
Updated On :12 மே 2026, 6:54 am IST

தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து விழுப்புரம் இடையே பேரணி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (மே 12) பிற்பகல் 12.05 முதல் மாலை 3.35 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனம் நிலையம் வரையே இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட வேண்டிய மெமு ரயில் அதற்குப் பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.

ஜோலாா்பேட்டை - பெங்களூரு: அதேபோல், அரக்கோணம் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜோலாா்பேட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூரு செல்லும் மெமு ரயில் சோமநாயக்கன் பேட்டையிலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.