பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ராமேசுவரத்துக்கான ரயில் சேவை வியாழன், வெள்ளி (மே 14, 15) ஆகிய இரு நாள்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
பாம்பன் உயா்நிலை ரயில் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை (மே 14) இரவு 9.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் ராமேசுவரத்துக்கான ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து புறப்படும் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் (56715) மண்டபத்துடன் நிறுத்தப்படும். இதேபோல, வெள்ளிக்கிழமை காலை ராமேசுவரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில் (56712) ராமேசுவரத்துக்குப் பதிலாக மண்டபத்திலிருந்து இயக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








