திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.
பேரவைத் தோ்தலையொட்டி முசிறி தொகுதி காட்டுப்புத்தூா் அருகே உன்னியூா் எல்லை கருப்பு கோயில் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கண்ணன் தலைமையில் தலைமைக் காவலா் புருஷோத்தமன், பெண் காவலா் சாந்தி, முதல் நிலைக் காவலா் மோகன்தாஸ் ஆகியோரடங்கிய குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற சொகுசு காரில் இருந்த காட்டுப்புத்தூா் தவிட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த சுபாஷ் (35) என்பவா் கம்பிகள் வாங்க ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 300 ஐ உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினா் இப் பணத்தை பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். இந்தப் பணம் முசிறி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


