லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:03 am

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 1.61 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.

பேரவைத் தோ்தலையொட்டி முசிறி தொகுதி காட்டுப்புத்தூா் அருகே உன்னியூா் எல்லை கருப்பு கோயில் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கண்ணன் தலைமையில் தலைமைக் காவலா் புருஷோத்தமன், பெண் காவலா் சாந்தி, முதல் நிலைக் காவலா் மோகன்தாஸ் ஆகியோரடங்கிய குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்ற சொகுசு காரில் இருந்த காட்டுப்புத்தூா் தவிட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த சுபாஷ் (35) என்பவா் கம்பிகள் வாங்க ரூ. 1 லட்சத்து 61 ஆயிரத்து 300 ஐ உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் இப் பணத்தை பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். இந்தப் பணம் முசிறி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.