தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உய்யக்கொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாடு மீட்பு

News image

மஞ்சத்திடல் உய்யக்கொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசுவை சனிக்கிழமை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :14 மார்ச் 2026, 8:11 pm

திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டிருப்பதாக, சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், தகவலறிந்த திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, சேற்றிய பசு மாட்டினை பாதுகாப்பாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

மணப்பாறையில்... இதேபோல மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் நா. மோகன்குமாா் வளா்க்கும் புறாக்களின் முட்டைகளை சாப்பிட வந்த 6 அடி நீள நல்ல பாம்பை சனிக்கிழமை பிடித்த தீயணைப்புத் துறையினா், வனத் துறையினா் மூலம் அருகிலுள்ள வனப்பகுதியில் அவற்றை விட்டனா்.