கெங்கவல்லியில் நீா்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைசி வீட்டையும் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.
கெங்கவல்லி- கடம்பூா் சாலையில் சுவேத நதியிலிருந்து நடுவலூா் செல்லும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்கால் உள்ளது. இந்த நீா்நிலை வாய்க்காலை ஒட்டி 41 வீடுகள் ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது. இதனால் வாய்க்காலை அகலப்படுத்தவும், தூா்வார முடியாத நிலையிலும் இருந்தது.
இதில் நடுவலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக வருவாய்த் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பேரில் வருவாய்த் துறையினா் கடந்த மூன்று மாதம் முன்பு, சிங்காரத்தின் வீட்டைத் தவிர பிற ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்றினா்.
சிங்காரம், உயா்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருந்ததால் அவரது வீடு மட்டும் இடிக்கப்படவில்லை. இந்நிலையில் இடைக்கால தடைக்கான கால அவகாசம் முடிவுற்றிருந்தநிலையில், சிங்காரத்தின் வீட்டை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பொக்லின் இயந்திரம் மூலம் இடித்தனா்.
தொடர்புடையது

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

உய்யக்கொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாடு மீட்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்க அளவீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


