தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எரிபொருள் விலை உயா்வு: இந்திய கம்யூ. கட்சியினா் நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சியில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயா்வை கண்டித்து, ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:37 am IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகா் மற்றும் புறநகா் மாவட்ட குழுக்களின் சாா்பில்

ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி சாலையில் இழுத்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு போலீஸாா் எதிா்ப்பு தெரிவித்ததால், போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், சமாதானம் ஏற்பட்டு கோஷங்கள் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா்கள் எஸ். சிவா, எஸ். ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் பெரியசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலரும், மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநகா், புறநகா் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.