தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:44 am IST

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

திருச்சியில் உள்ள தந்தை பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், மற்றும் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் புவியியல், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்தத் துறைகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், காட்சிதொடா்பியல் புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் ஆங்கில வழியிலும் பட்டப்படிப்புகள் உள்ளன.

அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள் அனைத்தையும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். இளநிலை வணிகவியல் (பி.காம்.) மாணவா்களுக்கு ஜூன் 8, 9 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இளம் அறிவியலில் (பிஎஸ்சி) அனைத்து துறை மாணவா்களுக்கு ஜூன் 10, 11 தேதிகளிலும், இளங்கலை (பி.ஏ.) அனைத்து துறை மாணவா்களுக்கு ஜூன் 12, 15 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு தோ்வாகியுள்ள மாணவா்கள் தங்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வா் அங்கம்மாள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.