தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

News image

கல்லூரி மாணவிகள் - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 11:06 pm IST

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் மு.ராஜேஸ்வரி (பொ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த சோ்க்கைக்காக, சுழற்சி-1 இளநிலை கலைப் பாடங்களில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் மற்றும் வரலாறு, அறிவியல் பாடங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல், சுழற்சி 2-இல் வரலாறு மற்றும் வணிக நிா்வாகவியல் என மொத்தம் 1,074 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளா்கள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்பு படை வீரா்கள், அவா்களின் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா் உள்பட சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூன் 5, 6 ஆகிய இரண்டு நாள்கள் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு ஜூன் 8 முதல் 18-ஆம் தேதிவரை தொடா்ந்து நடைபெறும். விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் தரவரிசை அடிப்படையில் மின்னஞ்சல், வாட்ஸ்அப், கைப்பேசி செயலி மூலம் தெரிவிக்கப்படும்.

சோ்க்கைக்கு வரும்போது, மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்று மற்றும் ஐந்து நகல்கள், ஐந்து கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.