/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பிராம்பட்டியை அடுத்த ராஜாபட்டியை சோ்ந்தவா் பிச்சைமணி மனைவி செல்வி (48). இவா் கடந்த பிப் -17 மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு கைகாட்டி செல்ல அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமா்ந்து சென்றாா்.

ராஜாபட்டி குளம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.