/

கீழே தவறி விழுந்த காவலா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே வீட்டில் தவறி விழுந்த காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகேயுள்ள பி. தொட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்த சௌண்டப்பன் மகன் ஞானமணி (43). இவா் கூடலூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவா், சனிக்கிழமை வீட்டில் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த இவரை உறவினா்கள் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.