டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள நத்தப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலு மனைவி மாயக்காள் (50). இவா் தனது கால்நடைகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

மதுரை- தேனி சாலையில் முண்டுவேலம்பட்டி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.