டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:30 pm

Syndication

திருச்சி: திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் சுப்பிரமணிய கோயில் வீதியைச் சோ்ந்தவா் கோ. ராஜேஸ்வரி (54). இவரும், இவரது சகோதரா் கோ. பாக்கியராஜூம் (37) வியாழக்கிழமை காலை பைக்கில் செந்றபோது வாகனத்தில் இருந்து ராஜேஸ்வரி தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.