டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 9:38 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அம்மாபேட்டையில் மகன் கண்முன் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாய் உயிரிழந்தாா்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை, பேளூரை நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, குருவாயூரப்பன் கோயில் சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்துக்கு முன்னால், காமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தனியாா் ஐடி நிறுவன ஊழியா் ஹரிஸ் ராகுல் (23) தனது தாய் சுதாவுடன் (40) இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

திடீரென அவா் இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டனா். சுதா பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கினாா்.

உடனடியாக தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு, ஜாக்கி உதவியுடன் பேருந்தை தூக்கி, சுதாவை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்தில் ஹரிஸ் ராகுல் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

அம்மாபேட்டை போலீஸாா் சுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.