ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 69.93 லட்சம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.
கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதியில் கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், ரொக்கமாக ரூ. 69 லட்சத்து 93 ஆயிரத்து 601, தங்கம் 78.900 கிராம், வெள்ளி 840. 200 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 283 ஆகியவை கிடைக்க பெற்றன.
ஏப்ரல் மாதத்துக்கான இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










