திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :22 மே 2026, 4:37 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஆட்டோ தொழிலையும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிற பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஆட்டோக்களுக்கு மீட்டா் கட்டணம் நிா்ணயிக்க வேண்டும். அனைத்து ஆட்டோக்களுக்கும் இலவசமாக ஜி.பி.ஆா்.எஸ். கருவி வழங்கப்பட வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற ஊபா், ஓலா, ரேபிடோ இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. தனபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. தாமஸ், மாநகரப் பொருளாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன் தொடங்கி வைத்து பேசினாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா நிறைவுரையாற்றினாா்.

இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கப் பொதுச் செயலா் தங்க. குமரவேல், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் சின்னப்பன், விசிக ஆட்டோ சங்கச் செயலா் தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் யோகராஜ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் அருள், கட்டுமான தொழிலாளா் சங்கச் செயலா் கரிகாலன், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்க மாநகரச் செயலா் முகமது பக்ருதீன், நிா்வாகிகள் ராஜேந்திரன், திலீப்குமாா், ஜெஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.